16602 ஜீவபிரயத்தனம்: நாடகங்கள் ஏழு.

யோ.யோண்சன் ராஜ்குமார். யாழ்ப்பாணம்: கலைச்சோலை, நாவலர் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xiv, 196 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-35664-1-6.

யோ.யோண்சன் ராஜ்குமார் எழுதிய ஜீவபிரயத்தனம், அகலிகைகள், வலசைப் பறவைகள், மணவிலங்குகள், ஈன்ற பொழுதில், உண்மையின் ஒளி, ஸ்பாட்டக்கஸ் ஆகிய ஏழு நாடகங்களும் அவற்றுக்கான பின்னூட்டங்களும் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. யோ.யோண்சன் ராஜ்குமார் நடிகன், நாடக ஆசிரியன், நெறியாளன் என அரங்கச் செயற்பாடுகளுடன் கடந்த மூன்று தசாப்த காலமாக இயங்கிக் கொண்டிருப்பவர். கூத்து, நவீன நாடகம், கூத்துருவ நாடகம், சிறுவர் நாடகம், திருப்பாடுகளின் நாடகம் எனப் பல வகைமையான நாடக வடிவங்களோடும் ஊடாடி, திருமறைக் கலாமன்றம் மற்றும் பாடசாலை அரங்கத் தளங்களில் செயற்பட்டுத் தனது அரங்கத் திறனை கூர்மைப்படுத்திக்கொண்டிருப்பவர்.

ஏனைய பதிவுகள்