16604 கடல்.

அருந்ததி (இயற்பெயர்: அருளானந்தராஜா இரத்தினம்). பிரான்ஸ்: அருளானந்தராஜா இரத்தினம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: ஆதித்யா பிறின்டர்ஸ்).

iv, 122 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-045-08-07.

இக்குறுங்காவியத்தின் ஆரம்பப் பகுதகள் 1999இல் பாரிசில் வெளிவந்த ”சுட்டுவிரல்“ சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இச்சஞ்சிகை நின்றுபாக இத்தொடரும் இடைநடுவில் நின்றுபோனது. 16 வருடங்களின் பின்னர் இதனை தொடர்ந்து எழுதிமுடித்து நூலுருவாக வெளியிட்டுள்ளார். ”கடல்” ஒரு காவிய முயற்சி. கவிதை எனும் ஓடத்தில் அனுபவ வலைகளை ஏற்றிச் சென்று ஆழங்களில் அமிழ்ந்து போயிருக்கும் உண்மைகளைக் கரையிழுப்பதற்கான ஆசிரியரின் முயற்சியே இக்காவியமாகும். யாழ்ப்பாணக் கடற்கரைக் கிராமமான நாவாந்துறையில் பிறந்த இந்நூலாசிரியர் அங்கு உயர்தர வகுப்பிற்கான அளவையியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1984இல் புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறியவர். படைப்பிலக்கியத் தளத்திலும் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர்.

ஏனைய பதிவுகள்