பூங்கோதை. சென்னை 600 101: எஸ்.அருண்மொழித்தேவன், தேனருவி பதிப்பகம், 211/5, அண்ணா நகர் மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1985. (சென்னை 600 024: விசாலம் பிரிண்டிங் ஹவுஸ், 2, 2ஆவது தெரு, டாக்டர் சுப்பராயன் நகர்).
xiv, 191 பக்கம், விலை: இந்திய ரூபா 17.00, அளவு: 18×12.5 சமீ.
இலங்கைத் தமிழ்ப் படைப்பாளியான ஞானப்பூங்கோதை அவர்கள் தமிழகத்தின் “தேவி” இதழ்களில் “கண்ணீர்க் கதைகள்” என்ற தலைப்பில் தொடராக இக்கதைகளை எழுதியிருந்தார். ஓலம், இழப்பு, வாழ்வின் விளிம்பில், அகதிகள் முகாமில் ஒரு குரல், சூறை, பெற்ற வயிறு, சாது-சாது-சாது, தலைகீழ், மலர்ந்த ரோஜாவும் மரணம் எய்தியது, அக்கினி வளையம், மண்ணின் மடியில், விடிந்த பொழுதுக்குள், கண்ணி வைத்து, தேடுதல் வேட்டை, வீட்டுக்கு ஒரு புலி, கொட்டியா அவில்லா கொட்டியா அவில்லா (புலி வந்து விட்டது புலி வந்து விட்டது), நெருப்பு மலர், தமிழனென்று சொல்லடா, தமிழனுக்கு ஒரு கேள்வி, மாறாதோ இக்காலம், உனக்கும் ஒரு நாள், புல்லட்-புல்லட்-புல்லட் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.