சூசை எட்வேட். திருக்கோணமலை: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2020. (திருக்கோணமலை: சிறீராம் அச்சகம் (ரிங்கோ பிரிண்டர்ஸ்), 158, தபால் நிலைய வீதி).
194 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-4628-74-8.
”இவன் தான் மனிதன்” என்ற சிறுகதைத் தொகுதியை 2013இல் வழங்கிய திருக்கோணமலைப் படைப்பாளியான சூசை எட்வேட் வழங்கும் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் இங்கு வீசியது ஒரு சமாதானக் காற்று, கருத்தில் இருத்துவாரா?, பொற்தாலி போனால், கடவுளைக் காண்கிறார், இவன் நல்ல சேவகன், அம்மாவின் வேண்டுதல், அவரின் மனிதாபிமானம், சுனாமி சுப்பிரமணி, கடலோடு போராடுவார், இழந்தவற்றில் ஒரு புள்ளி, புண்ணிய பூமியில் ஒரு கண்ணியவான், பாயோட ஒட்டவைப்பாங்க, இன்னொரு உலகம், தாராள மனம், நம்ம ஆள், தென்னை சிரித்தது ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.