16643 கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்.

பிரான்சிஸ் அமல்ராஜ். வத்தளை: யாத்ரா வெளியீடு, இல. 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, மாபோல, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி).

(16), 189 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-84480-9-0.

உள்ளத்தின் வடுக்களை எழுத்துக்களால் தொடுத்து வடிவமைக்கப்பட்ட நூல். தான் பெற்ற அனுபவங்களுடன், சிறிது கற்பனையையும் சேர்த்து ஒரு சம்பவத்திற்கு உயிரும் உருவமும் தந்து சிறுகதைகளாக்கியிருக்கிறார். “கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்” எம் வாழ்வியல் சம்பந்தமானது. எம் ஒவ்வொருவருடைய தெரிந்த தெரியாத வலிகளையும் கண்ணீர்களையும் சுமந்து வருவது. போர் விட்டுச்சென்ற இரத்த வாடைகளின் நாற்றுத்திற்குள் உழன்று கிடக்கும் எம் மக்கள் மீதான வெளிப்படையான பார்வை இந்த நூல். ஆசிரியரின் கண்களும், காதுகளும், உணர்ச்சி நரம்புகளின் வேர்களும் தினம் தினம் அனுபவித்து வந்த அந்த கருகிய நாட்களின் வரிச்சித்திரம். தமிழ்த் தந்தி பத்திரிகையில் 36 வாரங்களாக நீண்ட தொடராக வெளிவந்த கதைகளைத் தொகுத்து  ஒரு நூலாக வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62682).

ஏனைய பதிவுகள்

16967 சுவடுகள்-பாகம்1.

ஜீவைரியா ஷெரீப் (இயற்பெயர்: எம்.சி.எம்.ஷெரீப்). மூதூர்-1: அக்கரைச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம், புதிய இறங்குதுறை வீதி, இணை வெளியீடு, மூதூர் 4: எம்.எம்.கே. முகம்மது பௌண்டேஷன், நொக்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2011.