எஸ்.நஸீறுதீன். வெல்லம்பிட்டியா: மூன்றாவது மனிதன் வெளியீட்டகம், 617, அவிஸ்ஸவளை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xiv, 122 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-46-8.
வெள்ளை நிறத்திலொரு பூனை, இருக்கும் இடத்தை விட்டு, தொலைந்தவர்கள், அகவெளி தீண்டல், அவளும் இரு குறோட்டன்களும், கண்டுகொண்டேன், என் ஆசிய முத்தே, அதனை ஆராதனை செய் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. கவசங் களைதல் அவரது நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். எழுபதுகளிலிருந்து எழுதிவரும் நஸீறுதீன் இலங்கை தமிழ் சிறுகதைப் படைப்புலகில் விசேடமான கணிப்பிற்குள்ளாக்கப்பட வேண்டியவர். நல்லதோர் வீணை செய்தே (1996), பெண்ணே போற்றி (1999), மறைத்தலின் அழகு (2002) என்பன நஸீறுதீனின் முன்னைய சிறுகதைத் தொகுதிகளாகும்.