குறிஞ்சித் தங்கம் (இயற்பெயர்: க.தங்கவேலு). சென்னை 600104: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பிராட்வே, 1வது பதிப்பு, ஜீலை 2021. (சென்னை 21: மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்).
144 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22.5×15 சமீ.
1970ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து, தங்களின் கடும் உழைப்பால் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தங்களை வரித்துக்கொண்ட மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் மனம் விழித்தபோது, கறிவேப்பிலை, சின்னக் கங்காணிக்கு அப்படியும் ஒரு ஆசை, யாகாவாராயினும் தன் நிறைகாக்க, உரம், உலகத்திற்கு விடிகிறது, நீர்க்கோலம், நிரந்தர அமைதியைத் தேடி, வாழ்வின் விளிம்பிலே அவள், இவர்களும் திருடர்களே, மனித உருவில் ஆகிய 11 கதைகள் இடம்பெற்றுள்ளன.