16664 சாணையோடு வந்தது: சிறுகதைத் தொகுதி.

யூ.எல்.ஆதம்பாவா. சாய்ந்தமருது-9: யூ.எல்.ஆதம்பாவா, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, 183, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (சாய்ந்தமருது: ரோயல் ஓப்செட் அச்சகம்).

104 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 20.5ஒ14.5 சமீ., ISBN: 978-955-50411-0-2.

ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். இதில் நிலை மாறும் போது, பிராயச் சித்தம், தாடி, அந்த மாணவன், மனிதர்களில் இவன் ஒரு ரகம், திருமணம், நல்ல பிள்ளை, அந்த ஏழு நாட்கள், சாணையோடு வந்தது.. ஆகிய ஒன்பது சிறுகதைகள் அடங்கியுள்ளன.  நாடறிந்த சிறுகதை எழுத்தாளரும், கலாபூசணமும்,  ஓய்வுபெற்ற ஆசிரியருமான யூ.எல்.ஆதம்பாவா சாய்ந்தமருது சாஹிறா கல்லூரியில் நீண்ட காலம் ஆசிரியராகவும், பகுதி தலைவராகவும் கடமையாற்றிவந்தவர். 1961இல் இலக்கியப் பிரவேசம் செய்த இவர், 1999இல் இலங்கை அரசின் கலாபூஷணம் விருதினையும், 2005இல் வடக்கு-கிழக்கு மாகாண சபை ஆளுநர் விருதினையும் பெற்றவர். இவர் 02.06.2020 அன்று காலமானார்.

ஏனைய பதிவுகள்

13958 வரலாறு 10.

நூல் எழுத்தாளர் குழு (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் குறிப்பிடப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). vii, 70 பக்கம்,