மனோ சின்னத்துரை. (இயற்பெயர்: சின்னத்துரை மனோகரன்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
108 பக்கம், விலை: இந்திய ரூபா 120.00, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-93-95256-19-3.
பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் மனோகரன் முன்னர் “கொரோனா வீட்டுக் கதைகள்” என்ற தொகுப்பின் மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். இரண்டாவது தொகுப்பான இந்நூலில் யார் மீதும் குற்றமில்லை, கரு, அப்பா பிறந்த நாள், சொந்தக்காரர், குழப்படி, பிரம்பு, சிமிலா, ராமாயி திரும்பி வரவேயில்லை, சரா அண்ணர் ஏன் இப்படி நடந்துகொண்டார்?, அழு, மூளைச்சிறை, பேரப்பிள்ளை, தண்டனை, விஸ்வாவின் கதை, விஸ்வாவின் கதை தொடர்ச்சி, இப்படிக்கு நாங்கள், சிலங்கிரி, ஆகிய 17 கதைகள் இடம்பெற்றுள்ளன.