கலாசாரப் பேரவை. வாழைச்சேனை: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கோறளைப்பற்று, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: தமிழச்சு-அச்சகமும் பதிப்பகமும், 240, திருமலை வீதி).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
இந்நூலில் சிறுகதைப் பயிற்சிப் பட்டறையின் தேவை கருதித் தெரிவுசெய்யப்பட்ட காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் (தி.ஞானசேகரன்), இளவரசி (ஓட்டமாவடி அரபாத்), தாய் (வ.அ.இராசரத்தினம்), குண்டு வெடிப்பு (குமார் மூர்த்தி), படுவான்கரை (சக்கரவர்த்தி), கதையும் சிறுகதையும்: சிங்கமும் கரடியும், போகாமல் வந்தேனே (செ.யோகராசா) ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பயிற்சிப் பட்டறையின் விரிவுரையாளராக திரு. செ.யோகராசா (தலைவர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி) அவர்கள் பணியாற்றியிருந்தார்.