எஸ்.எல்.எம். ஹனீபா (மூலம்), சிராஜ் மஷ்ஹூர் (தொகுப்பாசிரியர்). அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).
32 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×12 சமீ., ISBN: 978-624-6047-03-0.
இலங்கைத் தமிழ் சிறுகதை முன்னோடிகள் என்ற தொடரில் ஐந்தாவதாக வெளிவரும் நூல் இது. இதில் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள் எழுதிப் பிரபல்யமான இரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. எல்.எல்.எம். ஹனீபா இலங்கை எழுத்தாளர்களில் இஸ்லாமிய வாழ்க்கையின் உள்ளடுக்குகளைச் சொல்லும் சிறநததொரு படைப்பாளியாவார். கிழக்கிலங்கையின் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே உறவுப்பாலமாகத் திகழ்ந்தவர்.