அழ.பகீரதன் (தொகுப்பாசிரியர்), பேரி.வேந்தன் (பதிப்பாசிரியர்). பண்டத்தரிப்பு: மறுமலர்ச்சி மன்றம் நம்பிக்கை நிதியம், காலையடி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
viii, 216 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-6309-01-5.
காலையடி மறுமலர்ச்சி மன்றம் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த வேளையில் அதன் பொன்விழா நினைவாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கையெழுத்துப் பத்திரிகையான “காலைக்கதிர்” இதழ்களில் எழுதிய ந.இரவீந்திரன், சோ.தேவராஜா உள்ளிட்ட பலர் இன்று பிரபல எழுத்தாளர்களாக மிளிர்கின்றனர். இம்மன்றம் 2022இல் நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கைகேயி (ச.இராகவன்), பள்ளிச் சட்டை (அகமது ஃபைசல்), மீட்பு (இ.ஸ்ரீஞானேஸ்வரன்), முனியாண்டி சாமியின் ரகசிய ஒப்பந்தம் (பதுளை சேனாதிராஜா), நிழற் பாவைகள் (ஸ்ரீலேக்கா பேரின்பகுமார்), கண்ணீருக்குச் சொந்தக்காரி (மு.சிவஞானம்), ஏழ்மையின் சுவை (சி.கிஷோர்த்தனா), முடிந்த கதை (சி.கதிர்காமநாதன்), நிரையும் நிராசையும் (கா.அற்புதராணி), அர்த்தம் புரியாத தமிழ்ச் சொற்கள் இரண்டு (வட வரணி சி.சபா), முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (நடராஜா கண்ணதாஸ்), இனி அவளுக்கு எறும்பு கடித்தால்? (அம்பிகை கஜேந்திரன்), வரிசை (சிவ சசிகாந்த்), ஆஸிபா (கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ்), சிறகுகள் விரிந்தன (பத்மஜா பாஸ்கரக் குருக்கள்), பருவ முதிர் காலம் (ப.வித்யாசாகர்), அவர்களின் பேராசை (இரா.சடகோபன்), தர்மத்தின் வாழ்வுதனை (மாத்தளை பெ.வடிவேலன்), அம்மா எனும் ஆசிரியன் (சிவ. இராஜேந்திரன்), தேயிலைச் செடி அல்ல மரம் (என்.கே.வேணி), மோட்சவாசல் (மல்லிகா செல்வரத்தினம்), தாய்மை (சுகுணராணி சண்முகேந்திரன்), யாதுமாகி நின்றாய் (டேவிட் சுலைஜா ஏஞ்சல்), கோலம் மா(ற்)றும் கண்கள் (தேன்மொழி சபா), ஆலகாலம் (கே.எஸ்.சுதாகர்), பிரியாவும் ஜேம்சும் (தேவகி கருணாகரன்), அன்பு மடல் (கலா ஜெயராசா), வேரோடிய விதை (இ.பிரதீபன்), கலையாத நினைவுகள் (மும்தாஜ் கலீல்) ஆகிய கதைகள இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.