16702 மனுஷி : சிறுகதைகள்.

சண். தவராஜா. திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஜீலை 2020. (சென்னை: கப்பிட்டல் பிரிண்டர்ஸ்).

ix, 10-80 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-944044-7-7.

இத்தொகுப்பில் மனுஷி, நெஞ்சு பொறுக்குதில்லையே, காட்டிக் கொடுப்பு, நோய், இரை, வண்டியும் ஒரு நாள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனுஷி என்ற கதை புகலிட வாழ்வில் பெண்களின் சமூக நிலையை விபரிப்பதாக அமைகின்றது. எஞ்சிய கதைகள் அனைத்தும் ஈழத்தின் போர்க்கால வாழ்வியலைப் பேசுகின்றன. சமூக செயற்பாட்டாளரான ஊடகவியலாளர் சண்.தவராஜா சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். திருச்சி இனிய நந்தவனம் பதிப்பாக வெளியான மனுஷி சிறுகதை நூல் சேலம் தமிழ்ச் சங்கம், கம்பம்- பாரதி கலை இலக்கிய மன்றம் ஆகியவை நடத்திய போட்டிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

14326 இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு: முதலாம் பாகம் .

இ.முத்துத்தம்பி. வட்டுக்கோட்டை: இ.முத்துத்தம்பி, பொருளியல் விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: கவின் அச்சகம், 122, நாவலர் வீதி). viii, 270 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 5.95, அளவு: 22×14