நிவேதா ஜெகநாதன். கொழும்பு 13: நிவேதா ஜெகநாதன், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (கொழும்பு 13: சண் கிராப்பிக் அன்ட் பிரின்டர்ஸ், 340, ஜம்பட்டா வீதி, கொட்டாஞ்சேனை).
x, 109 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-624-95090-4-7.
மலையகத்தில் ஹப்புத்தளையை பிறப்பிடமாகக் கொண்டு, கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட நிவேதா எழுதிய முதலாவது சிறுகதைத் தொகுதி இது. இந்நூலில் நிவேதா ஜெகநாதன் எழுதிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பயணங்கள், பூங்காவின் பூரிப்பு, வியர்வையில் வந்த வெள்ளாமை, குளத்து மீனுக்கு ஆசை, ஆலமரமே அழிந்தது, அவன் ஊனமல்ல, முத்தம்மா மொத்தமும் ஆனவள், வனவாசத்தில் ஒரு வனமகன், சித்திரையில் பிறந்தவள், பார்வை மாறிய பருவங்கள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.