திக்குவல்லை கமால், எம்.எச்.எம்.யாக்கூத், எஸ்.ஏ.சீ.எம்.கராமத் (மொழிபெயர்ப்பாளர்கள்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி,
1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கணேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52, A/1, கலஹிடியாவ).
viii, 9-248 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-1848-21-7.
இந்நூலில் சிங்களப் படைப்பாளிகளின் இருபது சிறுகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. எழுச்சி, போட்டிக்கு ஒரு சித்திரம், ராஜினி வந்து சென்றாள், முக்கோணம், மாட்டுக்காரன், உணவுவேளை, பைத்தியக்காரனின் கனவு, டிங்கித்தாவின் செயற்பாடுகள், பிணைப்பு, பிரதிபலிப்பு, இரண்டு அம்மாக்கள், தேசப்பற்றாளன், கைலாச பீடம், கலாசார விடய எழுதுநர், ஆசிரியர் மனதை நோகடித்து, விலங்கு, டோசர், ஒட்டு, தனிமரம், அக்கா ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இக்கதைகளை கீர்த்தி வெலிசரகே, கமல் பெரேரா, நிஸ்ஸங்க விஜேமான்ன, ஆனமடுவே விஜேசிங்ஹ, அனுலா விஜேரத்ன மெனிக்கே, சிட்னி மார்க்கஸ் டயஸ், எரிக் இளையப்ப ஆரச்சி, ஜயதிலக்க கம்மெல்லவீர, லியனகே அமரகீர்த்தி, சரத் விஜேசூரிய ஆகியோர் எழுதியுள்ளனர்.