குடத்தனை உதயன் (இயற்பெயர்: இராமநாதன் உதயகுமார்). சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, ஜீன் 2022. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).
192 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-5019-04-9.
இராமநாதன் உதயகுமார் (குடத்தனை உதயன்) வடமராட்சி கிழக்கு, குடத்தனையைப்; பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சுவிஸ் நாட்டில் 30 ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார். இவரது முதலாவது நாவல் ”விழியோரத்துக் கனவுகள்” 1988இல் வெளிவந்தது. ”விடியலைத் தேடி” என்ற தொடர்கதை பாரிஸ் ஈழமுரசுவில் தொடராக வெளிவந்தது. ”இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை” மணிமேகலைப் பிரசுரமாக 2016இல் வெளிவந்திருந்தது. புலம்பெயர் வாழ்வு எப்போதுமே இனிமையானதாக இருப்பதில்லை. அந்த வாழ்விலும் சொல்வதற்கு அச்சப்படும் ஒரு மறுபக்கம் உண்டு. அந்த இருள் படர்ந்த வாழ்க்கையை அடுத்த சந்ததிக்கு சொல்லியே ஆகவேண்டும் என்ற உந்துதலில் இந்நாவல் மலர்ந்துள்ளது. சில தவறுகளில் இருந்தும் தான் நாங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். பூவரசி வெளியீட்டகத்தின் 226ஆவது பிரசுரமாக இந்நாவல் வெளிவந்துள்ளது.