அருந்ததி (இயற்பெயர்: அருளானந்தராஜா இரத்தினம்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(10), 334 பக்கம், விலை: இந்திய ரூபா 280., அளவு: 21.5×14 சமீ.
யாழ்ப்பாணக் கடற்கரைக் கிராமமான நாவாந்துறையில் பிறந்த இந்நூலாசிரியர் அங்கு உயர்தர வகுப்பிற்கான அளவையியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1984இல் புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறியவர். படைப்பிலக்கியத் தளத்திலும் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். ஆண் மையங் கொள்ளாமல் பெண் இருப்பை அதன் வாழ்நிலை அவதியை, யதார்த்தவாத அழகியலின் வசீகரம் குன்றாத மொழியில் பக்கத்திலிருந்து வதியும் மானிட இருப்பை நேர்மையாக புனைவாக்கி நம்முன் வைத்துள்ள இந்த ஆண்பால் உலகு அருந்ததியின் முதல் நாவல்.