செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (சென்னை: சிவம்ஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12.5 சமீ.
ஆசிரியர் சிவானந்தன் ஓய்வு பெற்றதும் நகருக்குக் குடிபெயர்கிறார். பிள்ளைகளையும் உடை, நடை, கல்வியிலும் கண்டிப்பாகவே வளர்க்கிறார். மூத்தவன் சகாதேவன் இஞ்ஜினியராக மதுரையில் பணியாற்றுகிறான். அவன் நோயுற்றவேளை உதவிய எமிலி என்ற தாதிப் பெண்ணால் கவரப்படுகிறான். சகாதேவனின் தங்கை அருந்ததி, கல்லூரி விரிவுரையாளர் சாருமதியின் புதிய கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள். பெரும்பான்மைக் கிறிஸ்தவர்கள், கடவுள் பக்திக்குப் பணிந்திருப்பினும், சுய பாலின்பத்தை வெளிப்படையாக ஏற்கும் நிலைக்கு வந்துள்ளனர் என்ற கருத்தை ஏற்கிறாள். இயற்கை தந்த பாலுறுப்புகள் இயல்பாக, தாமே இன்பம் தேடும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளன என்று சாருமதி விளக்குவான். பாடசாலைகளில் பாலியல் கல்வியை பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே கற்பிக்கவேண்டும் எனவும் அவன் வலியுறுத்துகிறான். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56202).