கதிர். திருச்செல்வம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
xii, 200 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 20.5×15 சமீ.
ஆசிரியரின் மூன்றாவது எழுத்தாக்கம் இதுவாகும். இந்நெடுங்கதையில் திருக்கோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் கிராமத்தின் வாழ்வியலை, அதன் வரலாற்றுத் தகவல்களை, அழிந்துசெல்லும் அக்கிராமத்தின் பாரம்பரிய விவசாய முறைகளை இயன்றவரை பதிவுசெய்கின்றார்.