நிவேதா ஜெகநாதன். கொழும்பு 13: நிவேதா ஜெகநாதன், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (கொழும்பு 13: சண் கிராப்பிக் அன்ட் பிரின்டர்ஸ், 340, ஜம்பட்டா வீதி, கொட்டாஞ்சேனை).
ix, 125 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-624-95090-3-0.
தோட்டத்து மக்களின் வறுமையின் பிடிக்குள் கடன் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றதென்பதை இந்நாவலில் “கனகா” என்ற பாத்திரத்தின் வாழ்க்கைச் சிக்கலினூடாக எடுத்துக்கூறுகின்றார். வேலைக்கேற்ற ஊதியமின்மை, வரவுக்கு மீறிய அடிப்படைச் செலவினம், எப்போதும் வறுமைக்கோட்டுக்குக் கீழான வாழ்க்கை மலையகத் தாய்மாரை கடன் சுமைக்குள்ளே எப்போதும் தள்ளிக்கொண்டிருப்பதை இந்நாவலில் அழகாக எடுத்துக்கூறுகிறார் நிவேதா. பிள்ளைகளின் பாடசாலைச் செலவு, அயலாரின் திருமண, மரணச்சடங்குகளுக்கான சமூக நிதிப் பங்களிப்பு என கௌரவப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் “கடனாளி” கனகாவின் மீண்டெழ முடியாமல் தவிக்கும் அவல வாழ்வை ஆசிரியர் யதார்த்தமாக நகர்த்திச் செல்கின்றார்.