16750 சரித்திரம் சாகும் நாள்.

சதுரையூர் சரலியா (இயற்பெயர்: அலியார் நௌபர் அலி). சம்மாந்துறை 4: அலியார் நௌபர் அலி, சல்பியா மன்சில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (கல்லச்சுப் பிரதி).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல் ”சரித்திரம் சாகும் நாள்” என்ற குறுநாவலை உள்ளடக்கியிருக்கிறது. வாழ்வின் வேதனையும் சோதனையும், வெற்றியும் அவரது கதைக்குள் பட்டுத் தெறிக்கின்றன. இடையிடையே ஆழமான நாசூக்கான சிந்தனை வெளிப்பாடும் தெரிகின்றது. ஒரு அரசாங்க அதிபரான சப்ரி இக்கதையின் நாயகன். பலரும் அவரை கெட்டவராகக் கருதினாலும் அவரது உள்ளம்  என்னவோ தூய்மையானதாகவே இருக்கின்றது. நல்வாழ்வுக்கு உடல் ஆரோக்கியம் மாத்திரமல்ல, மன ஆரோக்கியமும் அவசியம் என்பதை இந்நாவல் வலியுறுத்துகின்றது. ஆசிரியரின் கன்னி முயற்சி இதுவாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12089).

ஏனைய பதிவுகள்