ஐ.சாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை).
368 பக்கம், விலை: இந்திய ரூபா 450., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-91093-41-9.
முன்னீடு, பாலன்-விடலை, காளை, முதுமகன் ஆகிய நான்கு பிரிவுகளில் சித்தனின் சரிதமாக இந்நாவல் விரிந்துள்ளது. இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் இந்நாவல் ஆறு தலைமுறையின் கதையை மட்டுமல்ல யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, விழுமியம் என்பவற்றிற்கும் மேலாகத் துயர் மிகுந்த வாழ்வியலையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது. சோழகக் காற்றும் நிலவும் தவிர்க்கமுடியாத கதாபாத்திரங்களாக உடன் வருகின்றன. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஐயாத்துரை சாந்தன் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ஆக்க இலக்கியங்கள் படைப்பவர். இந்திய சாகித்திய அக்கடெமியின் பிரேம்சந்த் ஃபெல்லோஷிப், இலங்கை கலாசாரத் திணைக்களத்தின் ”சாகித்ய ரத்னா” விதுதுகளைப் பெற்றவர்.