செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, ஜ{லை 2015. (சென்னை: சிவம்ஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12.5 சமீ.
கல்லூரிக் காலத்தில் சுசீலா மேல் வேட்கை கொண்ட சக மாணவர் மூவரையும் சுசீலா கைவிட நேருகின்றது. கனடா செல்லும் பெற்றோர் விருப்பிற்கு ஏற்ப வணிகரான மோகனை மணக்கிறாள். எதிர்பாராத மூன்று வருட வாழ்வின் பின்னர் மரணபயம் ஏற்பட்டதும் முன்னைய காதலர்களை நாடுகிறாள். இன்பத்தால் மரண பயத்தை மறக்க, மறைக்க முயல்கிறாள். சக மாணவன் சுந்தரமும் அவன் அறிமுகப்படுத்திய தோழியர் அம்பிகாவும் வைதேகியும் அவளுக்கு உதவுகின்றனர். சமனற்ற இன்ப உணர்வினை பகிரலாம் ஆனால் பங்குபோட முடியாது என சுசீலா தன் துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறாள். உலகின் மற்றைய பெண்களுக்கேற்படும் மகப்பெற்று நிலையும் அதுவே என்பாள் தோழி. வாழ்க்கை தனக்குப் பயன்பட வேண்டும் அல்லது சமூகத்திற்கு நலன் பயக்க வேண்டும் என்பாள் சுசீலா முடிவாக. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60603).