நவம் (இயற்பெயர்: ளு.ஆறுமுகம்). கொழும்பு: ஜனமித்திரன் வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், தபால் பெட்டி எண் 160, 1வது பதிப்பு, 1974. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் ரோட்).
129 பக்கம், விலை: ரூபா 4.90,அளவு: 17×12 சமீ.
“நீலவேணி” என்ற பெயரில் சுதந்திரன் பத்திரிகையில் 1953/1954 இல் தொடர்கதையாக முதலில் வெளிவந்த நாவல் இது. டாக்டர் சங்கரன் நிழல்மனிதனாக மாறிப் பல சமூகவிரோதக் கும்பல்களைத் தண்டிக்கிறார். இறுதியில் தான் விரும்பியவாறு காதலியைக் கரம்பற்றுகிறார். நிழல் மனிதன், மர்மக்குரல் மிரட்டியது, காரிருளில் ஓர் உருவம், டாக்டர் சங்கரன் நேர்சிங் ஹோம், சதி உருவாகியது, மல்லிகைத் தோட்ட பங்களாவில் கோரக் கொலை, கதாநாயகி வந்தாள், எதிர்பாராத எச்சரிக்கை, இக்கரை மாட்டுக்கு, அபலையின் பெருமூச்சு, அஜந்தாவின் திகைப்பு, பொறியில் சிக்கிய பறவை, நடுநிசி விஜயம், டுப்ளிக்கேட் நிழல் மனிதன், அழகேசன் வந்தான், வேஷம் கலைந்தது என இன்னோரன்ன விறுவிறுப்பான 37 அத்தியாயத் தலைப்புகளுடனும் வாசகரை கவர்ந்திழுக்கும் பல்வேறு உத்திகளுடனும் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.