செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2012. (சென்னை: சிவம்ஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12.5 சமீ.
சீவகன் தமிழகத்தின் பறவைகள் சரணாலயத்துக்குப் பெயர் பெற்ற “வேடந்தாங்கல்” கிராமத்தவன். அங்கு பிளஸ் 2 முடித்தபின் சித்தப்பாவின் ஏற்பாட்டில் சென்னைக் கல்லூரியில் பொருளாதாரம் கற்க வருகிறான். உலகப் பொருளாதார வீழ்ச்சி பற்றி பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் கெயின்சின் “கடன் கொள்கையை” அவனது விரிவுரையாளர் விசுவநாதன் எதிர்க்கிறார். மாறிவரும் சைக்கிள் நிகழ்வல்ல- கடன் சுமை என்பது. அது நீண்டகால வீழ்ச்சிச் சுமை என்பான் சீவகன். கல்லூரிக் கருத்தரங்கில், அரசுகள், உலக வங்கிகள், உள்நாட்டு வங்கிகளின் கடன் சுமையில் அகப்படும் மக்களும் கடன்பட்டார் நெஞ்சக் கலக்கத்தில் அகப்படுகின்றனர். மக்களின் ஆத்மா கடனோடு, வங்கிகளோடு, கந்து வட்டிக்காரரோடு பின்னப்படுகின்றனர். அமைதியற்ற வாழ்வு மக்களுக்கு ஏற்படுகின்றது என்றும் சிவன் கூறுவான். மாணவியர் சிவகாமி, வள்ளி தமது பட்டப் படிப்பிற்கு சீவகன் உதவியை வேண்டுவர். அவர்களின் தோழியான அகில் உட்பட யாவரும் பறவைகள் சரணாலயத்திற்கு உதவுகின்றனர். வெள்ளைப் பறவைகளை உவந்து உபசரித்தோம் வெள்ளை மனிதரை விருந்தினராக உள்விட்டோம். அவர்கள் மக்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்தனர் என்பான் சீவகன். அகிலின்ஆசிரியை மூலம் ஐம்புலன் இன்பத்துக்கு மேலாக அனைவரும் புதுவிளக்கம் பெறுகின்றனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56205).