16802 தென் பொதிகைச் சந்தனமே.

செ.லோகராஜா. மட்டக்களப்பு: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 14/3, A-4, கணக்குப்பிள்ளை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (திருக்கோணமலை: அஸ்ரா கிராபிக்ஸ்). 

144 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-43127-1-5.

இந்நூலில் இலக்கியம், கல்வியியல், சோதிடம், கோவில் வரலாறு ஆகிய விடயப் பரப்புக்குள் அடங்கத்தக்கதாக எழுதப்பட்ட ஆசிரியரின் பன்னிரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஓசை ஒலியெல்லாம் ஆனாய், தென் பொதிகைச் சந்தனமே, கவிதை காட்டும் மக்கட் பண்பு, கவியரசு கண்ணதாசனின் கவித்துவம், பயனுற வாழ்வதற்கு இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் சமூக நோக்கு, அதிபரின் வினைத்திறன் மிக்க முகாமைத்துவம், கல்விப் பணியில் ஆசிரியரின் பங்கு, மாணவர்களின் கற்றலில் ஏற்படும் பிரச்சினைகள், ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்களைச் சித்திபெறச் செய்வதற்குத் திட்டமிடல், ஈழத்துப் புராதன சிவன் கோயில்களும் இந்து சமயக் கோட்பாடுகளும், சோதிடக் கலையின் தாற்பரியம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்