கெகிறாவ ஸீலைஹா. கெகிறாவ: கெகிறாவ ஸீலைஹா, செக்குப்பிட்டிய, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founder Street).
144 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-53263-4-6.
கெகிறாவ ஸீலைஹாவின் ஆறாவது படைப்பாக இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுதி வெளிவந்துள்ளது. இதில் நிர்க்கதியான மக்களின் காவலரண்: சிலி தேசம் தந்த உன்னதக் கவி பப்லோ நெரூடா, பெரும் புகழ் பிரிந்து போயாயிற்று: மகாத்மாவுக்கான நேருவின் அஞ்சலியுரை, தலித் இலக்கியத்தில் பெண்களின் வகிபாகம், பெண்ணின மற்றும் கறுப்பின மக்களினது குரலாய் ஒலித்த மாயா அஞ்ஜலோ, வில்லியம் வேட்ஸ்வேர்த்தின் ”மில்டன்” கவிதையை முன்வைத்து, பதினேழாம் நூற்றாண்டின் மெய்ப்பொருள் கவிஞன் ஜோன் டன் டேவிட் யீடன், பூமி இளையதாயிருக்கையில்: நூலுள் உள்ளம் தொலைத்து, தஜிகிஸ்தானின் மக்கள் கவி ரசூலின் கவிதைகளை நயந்து: ”ஞாபகம் உதிராப் பூவென” கஃப்காவின் கடிதங்களுள் ஊடுருவி ஆகிய ஒன்பது மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.