கெகிறாவ ஸீலைஹா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
120 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-5881-70-3.
இந்நூலில் சில்வியா ப்ளாத் (தற்கொலையின் திசைபால் பறத்தல், சில்வியா ப்ளாத் பயன்படுத்திய படிமங்கள், சில்வியா ப்ளாத்தின் ”கண்ணாடி”), கறுப்பினக் கவிதைகள் மூன்று ( J.P.Clark இன் ”இரவு மழை”, Nikki Giovanni யின் ”என் கவிதை”, Gabriel Okaratpd “பியானோவும் மேளமும்”), செக்கோவ்வும் கோர்க்கியும், ஒரு காதல் ஜோடியின் இரு கவிதைகள் (Meeting at Night -இரவில் சந்திப்பு-ரொபர்ட் ப்ரௌனிங், How do I Love Thee -என்னென்ன வழிகளில்..-எலிஸபெத் பாரெட் ப்ரௌனிங்), பப்லோ நெருடாவின் எழுதப்படாத கவிதை, டேமன் கல்காட்டின் புக்கர் பரிசு, அப்துல் ரசாக் குர்னாவும் நோபல் பரிசும், வில்லியம் ப்ளேக்-கவிதைகளுக்குள் கவிதைகள் (இலண்டன், அந்த புகைக்கூட்டுத் தொழிலாளிகள், பிணியுற்ற ரோஜா, கைக்குழந்தையின் துயரம்), ஜீன் அரசநாயகம் வாழ்வும் எழுத்தும், தற்கொலையின் திசைபால் பறத்தல், கிரிஸ்டினா ரொசெட்டி-இரு கவிதைகள் (எதிரொலி, ஞாபகங்கொள்), ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸ் – பொறியில் முயல், எமிலி டிக்கின்சன்-மென்நடையில் வந்தது பறவை, பெட்ரிக் ஃபெர்ணான்டோ- மீனவப் பெண்ணின் அழுகை, சை கோபன், மெல் ஃபோரீ- எவருமிலாக் குழந்தை, லோங்ஃபெல்லோ-அடிமையின் கனவு, டி.எஸ்.எலியட்- யன்னலருகே ஒரு காலைப் பொழுது, ஹரிந்திரநாத்- மண் கிண்ணம், பீட்டில் குழுப் பாட்டு- எங்கணுமற்ற மனிதன் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 242ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.