ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி). திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், மணப்பாறை ரோடு, 1வது பதிப்பு, 2015. (திண்டுக்கல் 624 001: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட், 229/4, மேற்குரத வீதி).
86 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 17.5×12 சமீ.
ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மௌலானா (ரலி)அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் 33ஆம் தலைமுறைப் பேரராக இலங்கையின் திக்குவல்லை என்னும் ஊரில் 29.12.1899 அன்று பிறந்தார்கள். தந்தை அஸ்ஸையித் முஹம்மது ஜமாலிய்யா மௌலானா (ரலி) அவர்கள் பகுதாதிலிருந்து வந்து இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழ்ந்து சம்பைப் பட்டினம் தர்ஹாவில் நல்லடக்கம் பெற்றுள்ளார்கள். குத்புல் பரீத் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மௌலானா அவர்கள் 1961ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் ”ஹராமும் ஹலாலும்”, ”அறபு இலக்கிய வளர்ச்சி” ஆகிய தலைப்புகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் இதுவாகும்.