ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).
55 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-624-97389-1-1.
ஒரு பொருள் குறித்து பல வகைச் செய்யுள்களை மாற்றி மாற்றிப் பாடுவதை மாலை என்றார்கள். அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களை வைத்துப் புனையப்பட்டுள்ள ”இறையருள் மாலை” காப்பியக்கோவின் எழுத்தாற்றலின் இன்னொரு வெட்டுமுகமாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆக்க இலக்கியம் ஆக்குவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.