16820 நாயகர் பன்னிரு பாடல்.

J.S.K.A.A.H. மௌலானா. சென்னை 600 017: நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், தியாகராய நகர், 2வது பதிப்பு, மே 2007, 1வது பதிப்பு, 1964. (சென்னை 2: உதயம் ஆப்செட், சிந்தாதிரிப்பேட்டை).

xviii, 78 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 18×12 சமீ.

இந்நூல் 2007-மே 25,26,27 சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டில் துபை(துபாய்) ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினரால் வெளியிடப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நூலாசிரியர் பற்றி, மதிப்புரை, முகவுரை, கடவுள் வணக்கம், அவையடக்கம் ஆகிய ஆரம்பப் பக்கங்களைத் தொடர்ந்து, வந்தனர் தூதரன்றே, ஈந்தன ரமுதமன்றே, வளர்ந்தனர் நாளுமன்றே, சீர்த்தனர் வாழ்வுமன்றே, உறுத்தினர் துன்பமன்றே, வென்றவிண் சென்றாரன்றே, சீர்த்தது துணையு மன்றே, வாழ்ந்தனர் வாழ்வுமன்றே, மணந்தனர் தூதரன்றே, உத்தமத் தூதரன்றே, கொள்கையி றூதரன்றே, இறந்தனர்  தூதரன்றே ஆகிய தலைப்புகளின் கீழ் பன்னிரு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து அருஞ்சொற் றொடர்ப் பொருட் கோடலும் பா நுண் பொருளும், அருஞ்சொற்கள், பிரயோகித்த அரபிச் சொற்களும் பெயர்களும் அகியன பின்னிணைப்புகளாக இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Upto £1000 Added bonus

Blogs Casino Volt $100 free spins | Take a look at Added bonus Conditions Icons PayPal Welcome Bonuses You will constantly you desire an effective