ஜஉபருல் பர்ஸன்ஜிய் (அறபு மூலம்), ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா (தமிழாக்கம்). திருச்சி 620001: ஜமாலிய்யா பதிப்பகம், 22/35, இரண்டாவது தெரு, செல்வநகர், திண்டுக்கல் ரோடு, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (தமிழ்நாடு: ரிப்தா கம்ப்யூட்டர் ஆப்செட் பிரிண்டர்ஸ், 229ஃ4, மீரா காம்ப்ளெக்ஸ், ஃபயர் சர்வீஸ் எதிரில், மேற்கு ரத வீதி, திண்டுக்கல்).
194 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
அறபு நாடுகளிலும் அறபல்லாத மற்றைய நாடுகளிலும் நபிமார்களின் சரிதைகளாகவும் வலீமார்களின் சரிதைகளாகவும் ஆரம்ப காலந்தொட்டே பல நூல்கள் அறபு மொழியில் வெளிவந்துள்ளன. அவை சரித நூல்களாக மாத்திரமல்லாது நபிகள் நாயகம் அவர்களைப் புகழ்ந்தேத்தும் புகழ்மாலைகளான சீரிய அறபு இலக்கியங்களாகவும் போற்றப்பட்டு வந்துள்ளன. அவை திருக்குர்ஆன், சிறப்புமிக்க ஹதீஸ்கள், மூலாதாரக் கலைகள் என அறியப்பட்டன. “மவ்லிதுல் பர்ஸன்ஜிய்” என்ற இச்சீரிய இலக்கியச் சரிதை நூல் அறபு மொழியில் ஜஉபர் அவர்களால் ஆக்கப்பட்டுள்ளது. ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா (J.S.K.A.A.H. மௌலானா) இதனை தமிழாக்கம் செய்துள்ளார். இடையிடையே அறபுக் கவிதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.