கி.விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 56ஃ5, மணல்தறை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
138 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-50739-05.
சங்க இலக்கியத்தில் முல்லைத் திணை, புறநானூற்றில் மேல் உலகும் கீழ் உலகும், புறநானூற்றில் புலவர்களும் புரவலர்களும்: உறவுநிலை குறித்த சமூகவியல் நோக்கு, தமிழிலக்கிய வரலாற்றில் கலித்தொகையின் கால அடைவு, கலித்தொகையில் கைக்கிளையும் பெருந்திணையும், ஆகிய ஐந்து கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் ஐந்தாயினும் அவை ஐந்தும், முல்லைத்திணை பற்றிய ஒரு தொகுநிலைப் பார்வை, கலித்தொகையின் அமைவு, காலம் பற்றியது, புறநானூறு குறிப்பாக, அது சுட்டும் சமூகப் பின்புலம் பற்றியது என மூன்று விடயப் பொருள்களை உள்ளடக்குகின்றன. கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.