சு.அருளம்பலவனார் (மூலம்), அ.சண்முகதாஸ், ச.மனோன்மணி (மீள்பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2021, (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xliii, 1234 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15.5 சமீ.
இந்நூலின் முதலாம் பாகத்தை 1960இல் யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தினரும், இரண்டாம் பாகத்தை 1963இல் ஸ்ரீ சண்முகநாத அச்சகத்தினரும் வெளியிட்டிருந்தனர். தற்பொழுது இரண்டு பாகங்களும் இணைந்ததாக இந்நூல் வெளிவந்துள்ளது. பழையவுரை, ஒப்புமைப் பகுதி, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகள் முதலியவற்றுடன் மதுரைத் தமிழ்ச்சங்க அங்கத்தவரும் காலி அரசாங்க உயர்தர கலாசாலையின் முன்னைநாள் தலைமையாசிரியருமான பண்டிதர் சு.அருளம்பலவனார் இவ்வாராய்ச்சியுரையை இயற்றியுள்ளார். பண்டைத் தமிழ்சங்க இலக்கியங்களுள் பதிற்றுப்பத்து முக்கியமானது. சேர அரசர் பதின்மர்மீது நல்லிசைப்புலவர் பதின்மரால் பாடப்பெற்ற பப்பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளின் தொகுப்பே பதிற்றுப்பத்தாகும்.