16836 தராசு முனைகள் : பகுதி 1.

சிறீ சிறீஸ்கந்தராசா. யாழ்ப்பாணம்: சிறீ சிறீஸ்கந்தராசா, 419, கொழும்புத்துறை பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி).

xvi, 104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-97879-1-9.

இந்நூலில் ஆசிரியரின் இருபது மதிப்பீட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் பெரும்பாலும் லண்டனில் இருந்து வெளியாகும் எழுத்தாளர் முல்லை அமுதனின் ”காற்றுவெளி” மின்சஞ்சிகையில் அவ்வப்போது வெளியானவை. இவை கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பரந்த துறைகளில் வெளிவந்த நூல்களின் மதிப்பீடுகளாகும். வல்லமை தாராயோ (தர்ஷினி), முற்றத்து மல்லிகை (பொன்-சிவகௌரி), கண்ணீரினூடே தெரியும் வீதி (தேவமுகுந்தன்), கருணை நதி (மிதயா கானவி), அர்த்தமுள்ள மௌனம் (மாலினி மாலா), காதலெனும் சோலையிலே (மலைமகள்), காகம் கலைத்த கனவு (சோலைக்கிளி), இன்னுமோர் இன்பத்துப் பால் (முகில்வாணன்), என்னையே நானறியேன் (சந்திரகௌரி), தடம் தொலைத்த தடயங்கள் (பிரகாசக் கவி), பள்ளத்தாக்கில் சிகரம் (ராஜகவி ராஹில்), அரங்க அலைகள் (சுதாகரி), என்றாவது ஒரு நாள் (கீதா மதிவாணன்), தாயுமானவன் (மணிமேகலை), இரவின் மழையில் (ஈழக்கவி), சிலந்தி பின்னிய பட்டு வலையில் சிக்கிய விண்மீன்கள் (ராஜகவி ராஹில்), ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் (ராஜாஜி ராஜகோபாலன்), மீண்டு வந்த நாட்கள் (வதிரி சி.ரவீந்திரன்), தமிழே தருவாய் நல்வரம் (திரு.கிரிகாசன்), ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து (மேமன் கவி) ஆகிய நூல்கள் இங்கு மதிப்பீடு செய்ப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்