வ.ஜசிந்தன் (மலர்க் குழுத் தலைவர்). யாழ்ப்பாணம்: நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம், நாவற்காடு, வரணி, தென்மராட்சி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xx, 84 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7192-00-0.
நதியோர நாணல்கள் இலக்கிய மன்றத்தின் முதலாவது வெளியீடாக இவ்விலக்கியத் தொகுப்பு பல்வேறு படைப்பாளிகளின் ஆக்கங்களுடன் வெளிவந்துள்ளது. மலர்க்குழுத் தலைவராக வ.ஜசிந்தன் அவர்களும், செல்வி க.இராசமலர் (செயலாளர்), செ.கபிரியேல்பிள்ளை (ஆலோசகர்), சி.சபாரத்தினம் (ஆலோசகர்), சி.மகிந்தன் (நிலையப் பொறுப்பதிகாரி) ஆகியோர் அங்கத்தவர்களாகவும் இணைந்து இம்மலரை வெளிக்கொணர்ந்துள்ளனர். கிராமியக் கவிதைகள் (தாவணிக்கால கனவுகள், ஆல விழுது ஊஞ்சல், சதிராடும் மீன்கள்), புதுக்கவிதை தழுவிய புரட்சிக் கவிதைகள் (அன்னைத் தமிழே நீயழகு, வெந்தணல் வீசும் காற்று), மரபுக் கவிதைகள் (வானமழை பெய்துவிட்டால் மாநிலமே குதூகலிக்கும்), கவிச்சமர் (மனவலிமை அதிகமுள்ளவர்கள் ஆண்கள், மனவலிமை அதிகமுள்ளவர்கள் பெண்கள்), ஹைக்கூ கவிதைகள், நதியின் ஓசைகள் -புதுக்கவிதைகள் (காதலாகிய கவிதை, முடிவறியாப் பயணம், நதியாகும் மழைத்துளிகள்), சிறுகதைகள் (நடமாடும் நடைபிணங்கள், முதல் காதல்), கட்டுரை (போதைப் பொருளும் இளைய தலைமுறையினரும்), பின்னிணைப்பு (நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம் நடாத்திய இலக்கியப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிபெற்ற படைப்பாளிகளின் விபரம்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆக்கங்கள் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன.