நா.முத்தையா. கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
ii, xiii, 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0881-16-1.
கடந்த காலங்களில் ஈழத்தில் வாழ்ந்த பதினாறு ஈழத்துச் சித்தர்களை இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது. கடையிற் சுவாமிகள், பரமகுரு சுவாமிகள், குழந்தைவேற் சுவாமிகள், அருளம்பல சுவாமிகள், யோகர் சுவாமிகள், நவநாத சித்தர், பெரியானைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள், சடைவரத சுவாமிகள், ஆனந்த சடாட்சர குரு, செல்லாச்சி அம்மையார், தாளையான் சுவாமிகள், மகாதேவ சுவாமிகள், சடையம்மா, நாகநாத சித்தர், நயினாதீவுச் சுவாமிகள் ஆகிய 16 சித்தர்கள் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறுகள் கட்டுரைவடிவில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 1980ம் ஆண்டுக்குரிய சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. (இது முன்னர் ஜீன் 1994இல் சென்னை குமரன் பதிப்பகத்தினரால் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டது. 2017 இல் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பினை அமரர் தம்பிப்பிள்ளை ஈஸ்வரலிங்கம் அவர்களின் சிவபதப்பேறு குறித்த ஈஸ்வர தீபம் நினைவுமலராக 26.03.2023 அன்று மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது).