நாக. கெங்காதரன் (பதிப்பாசிரியர்). ஐக்கிய இராச்சியம்: நடராசா சச்சிதானந்தன் பவள விழாக் குழுவினர், 13, Arcus Road, Bromley BR1 4NN, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (சென்னை 600005: ஸ்ரீ ராகவேந்திரா லேசர் பிரின்டர்ஸ், 15/8, சுவாமி ஆச்சாரி வீதி, இராயப்பேட்டை).
190 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 981-1-64440-754-7.
லண்டனில் வாழும் சமூக ஆர்வலர் நடராசா சச்சிதானந்தன் அவர்களின் பவளவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நூல் வாழ்வும் பணியும் (நாக சிறிகெங்காதரன்), ஆசியுரைகள், வாழ்த்துரைகள் ஆகியவற்றுடன் சமூக நாயகன் (மு.நித்தியானந்தன்), தமிழ்ச் சங்கமும் சச்சியும் (சூ.க.சுப்பிரமணியன்), வாய்ச்சொல்லில் வீரரடி (பதஞ்சலி நவேந்திரன்), அர்ப்பணிப்போடு உழைப்பவர் (புதினம் ராஜகோபால்), சமாதானத் தூதுவன் (எஸ்.எஸ்.எம்.பசீர்), தனி மனித தீர்க்க தரிசனம் (சிவ. பரிமேலழகர்), மீண்டும் ஒரு இராமநாதன் (பாடசாலைச் சமூகம்), புலம்பெயர் வாழ்வின் அடையாளம் (வி.சிவலிங்கம்) ஆகிய கட்டுரைகளையும் தனிப்பதிவாக நடராசா சச்சிதானந்தன் அவர்கள் எழுதிய “திரும்பிப் பார்க்கிறேன்” என்ற கட்டுரையையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.