வவுனியா: எம்.வி. பப்ளிகேஷன், தங்கம்மா முதியோர் இல்லம், புதுக்குளம், கனகராயன் குளம், 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை).
xv, 418 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
“யாரொடு நோகேன்” என்று தொடங்கி, “திடீர் லண்டன் பயணம்” என்பது ஈறாக 75 அத்தியாயங்களில் ஆசிரியர் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பட்டம்பெற்ற முருகர் குணசிங்கம் அதே பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் பின்னர் உதவி நூலகராகவும் பணியாற்றியவர். உயர்கல்விக்காக இந்தியாவுக்குச் சென்றவர் அங்கு பறோடா பல்கலைக்கழகத்தில் சிலகாலம் பயின்ற பின்னர் லண்டனுக்குச் சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று நீண்டகாலம் வாழ்ந்தவர். தான் பிறந்த இடமான புதுக்குளம் என்னும் கிராமத்தில் ஒரு முதியோர் இல்லத்தையும், பாடசாலை ஒன்றையும் உருவாக்கி 2017முதல் சேவையாற்றி வருகிறார்.