தெனகம சிரிவர்த்தன (சிங்கள மூலம்), மடுளுகிரியே விஜேரத்ன (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(x), 11-160 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-30-4778-6.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இளமைக்கால சுயசரிதை சிறுபராயக் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. தெனகம சிரிவர்த்தன இதனை முன்னர் ”துப்பத் தருவன்கே மிதுறா” என்ற பெயரில் சிங்கள மொழியில் எழுதியிருந்தார். பிறந்தகத்தின் போராளி/ ஏழைப் பாலகர்களின் தோழன்/ அது தான் சரியான செயல்/ வெள்ளையர்கள் இருந்திருந்தால் நானும் அவர்களுடன் சண்டை பிடிப்பேன்/ ஒரு சுதந்திரத்தைப் பார்/ ஒரு விவசாயி பாராளுமன்ற உறுப்பினரானது எப்படி?/ பாராளுமன்றத்தில் மாடு இருப்பதா?/ அவ்வாறான வேலைகளை இனி செய்யமாட்டேன் அம்மா/ பயங்கரமான விளையாட்டு/ தந்தை காட்டிய முன்மாதிரி/ நாமும் அவர்களைப்போல ஆகுவோம்/ நாம் மகாராணியைப் பார்க்க ஏன் வந்தோம்?/ பிரித்/ மாங்காய் அடி/ மீனவர்கள் ஏன் ஏழை?/ கிராமத்து நோயாளிகளைத் தேடி/ ஆசிரியரின் மனதைப் புண்படுத்தாமல்/ பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு நல்லதொரு பாடம்/ ஏழை மாணவனைப் பாதுகாத்தல்/ குறும்புவேலைகள் செய்தால் பரவாயில்லை ஆனால் கீழ்த்தரமான வேலைகள் செய்யவேண்டாம்/ மகனே ஆண் கதாபாத்திரத்தில் நடித்தாலும் பெண் பாத்திரத்தில் நடிக்கப் போக வேண்டாம்/ அந்தச் சட்டத்தால் பயனில்லை/ அப்பாவுக்கும் டிக்கற் விற்பனை/ தமிழ் மாணவர்களின் பாதுகாவலன்/ இந்தப் பேருந்து மக்களுக்குச் சொந்தம்/ கிராமத்தில் நானும் விவசாயி/ பொம்மை/ தந்தைமார் உருவாக்கிய கட்சியை விட்டுப் போக வேண்டாம்/ எஜமானுக்கும் ஒரு படிப்பினை/ தொழிலும் போராட்டமும்/ தந்தையிடமிருந்து ஒரு கடிதம்/ 18 வயது ஊழியர் சங்கத் தலைவர்/ பணம் நிறைந்த அலுமாரி ஒன்றை வேண்டாம் என மறுத்த தந்தை/ மரணத்துக்குப் பயப்படாத மனிதன்/ கடனிலிருந்து மீள்வதில் உள்ள மகிழ்ச்சி/ உத்தம தந்தையொருவர் உலகத்திலிருந்து விடைபெறுகிறார்/ பெலியத்தைக்கு கட்சி அமைப்பாளராக நியமனம்/ தம்பராவே தேரரின் கொலைக்குக் கண்டனம்/ எந்தக் கேள்விக்கும் பதில் உண்டு/ ஜனநாயகம் இதுவா?/ மஹிந்த பாராளுமன்றம் செல்கின்றார் ஆகிய 41 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.