16903 ரவீந்திரம். கா.சிவஞானசுந்தரம் (இதழாசிரியர்).

யாழ்ப்பாணம்: விழாக் குழுவினர், கல்வயல் ஸ்ரீ சண்முகானந்த வித்தியாலயம், கல்வயல், 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

36 ஆண்டுகால கல்விச் சேவையில் 19.07.2002 முதல் 06.02.2016 வரையிலான 13 ஆண்டுகள் தான் முன்னர் தனது அரம்பக் கல்வியைப் பெற்ற, யா/கல்வயல் ஸ்ரீசண்முகானந்த வித்தியாலயத்திலேயே அதிபராகக் கடமையாற்றிய “பிரதீபா பிரபா” இராசரத்தினம் ரவீந்திரன் (பிறப்பு: 07.02.1956) அவர்கள் அகவை அறுபதை நிறைவுசெய்து ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு வெளியிடப்பட்ட மணிவிழாச் சிறப்புமலர். இம்மலர் 07.02.2016 அன்று வெளியிடப்பட்டது. இம்மலர் ஆசிச் செய்திகளையும் வாழ்த்துச் செய்திகளையும், திரு. ந.சர்வேஸ்வரன் அவர்கள் தொகுத்திருந்த கல்வயல் கிராமத்தின் வரலாறு, யாழ். கல்வயல் ஸ்ரீசண்முகானந்த வித்தியாலயத்தின் வரலாறு ஆகியவற்றையும் உள்ளடக்குகின்றது. நல் அதிபர்களுக்கான “பிரதீபா பிரபா” விருதினை இவர் 2015இல் ஜனாதிபதியிடமிருந்து பெற்றிருந்தார்.

ஏனைய பதிவுகள்

14165 மணிமொழிகள்: நாவலர் மணிமண்டப திறப்புவிழா நினைவுமலர் 19.05.1995.

மலர்க் குழு. கொழும்பு 15: வடகொழும்பு இந்து பரிபாலன சங்கம், 40, கோவில் வீதி, 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 152 பக்கம், புகைப்படங்கள்,