16915 மரியசேவியம்: கலைத்தூது அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் முதலாம் ஆண்டு நினைவு மலர்.

கி.செல்மர் எமில் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராப்பிக்ஸ், 54, இராஜேந்திரா வீதி).

vii, 186 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

கலைத்தூது அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் (03.12.1939- 01.04.2021) முதலாம் ஆண்டு நினைவு தினம் 01.04.2022 அன்று அனுஷ்டிக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட நினைவுமலர் இதுவாகும். அடிகளார் பற்றிய பல்வேறு சமூக, கலை இலக்கியத்துறை பிரமுகர்களின் நினைவுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் உள்ள விடயங்கள் கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகள்,  கவிதைகள், அரங்க நிறுவனங்களின் அஞ்சலிகள், பொது நிறுவனங்களின் அஞ்சலிகள், அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிகள், பிரசுரங்கள் என்ற ஒழுங்கில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்