16917 அமரர் திரு.க.ப.சின்னராசா அவர்களின் சிவபதப்பேறு குறித்து வெளியிடப்பட்ட நினைவுமலர்.

ஜெயலட்சுமி சுதர்சன். சுன்னாகம்: அமரர் க.ப.சின்னராசா குடும்பத்தினர், இணுவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (சுன்னாகம்: அஸ்வின் அச்சகம்).

70 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

9.8.2022 இல் இடம்பெற்ற அமரர் க.ப.சின்னராசா அவர்களின் சிவபதப்பெறு குறித்த நிகழ்வில் இந்நினைவுமலர் வெளியிடப்பட்டது. மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னராசா, சிறந்ததொரு மிருதங்க வித்துவானாவார். க.ப சின்னராசா அவர்கள் மிருதங்கத்தின் ஊடாக பரதநாட்டியத்திற்கு ஆற்றிய பணிகள் முதன்மையானதும் தனித்துவமானதுமாகும். யாழ்ப்பாணத்தில் வாழும் மூத்த கலைஞர்;ககளுள் ஒருவரான இவர் மிகச்சிறந்த மிருதங்க வித்துவான் என்பதுடன் இசை, நடனக் கச்சேரிகளுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்தல், இசை நடன பாடலாக்கம், ஜதிக்கோர்வைகள்; என்பவற்றையும் உருவாக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்