ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம்; ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).
48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16 சமீ.
சைவத் தமிழ்ப் பண்பாட்டின் ஓர் அடையாளமாக விளங்கும் கோவில் சூழ் இணுவில் கிராமத்தில் பிறந்தவர் இரகுபதி பாலஸ்ரீதரன். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 11.11.2022 அன்று இடம்பெற்ற “அற்றைத் திங்கள்” நிகழ்வில் கலாபூஷணம் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் ஆற்றிய உரையின் நூலுரு இதுவாகும். பிறப்பும் கல்வியும், அரசியல் தொடர்பு, தொழில் வாழ்க்கை, ஆன்மீகம், குடும்ப வாழ்க்கை, வெளிநாட்டுப் பயணங்கள், எழுத்துப் பணிகள், தமிழ்ச் சங்கப் பணிகள், வெளிநாட்டுரைகள், அங்கம் வகிக்கும் அமைப்புகள் ஆகிய அத்தியாயத் தலைப்புகளின் கீழ் இந்த சுயவரலாற்றுரை இடம்பெற்றுள்ளது.