அருணா செல்லத்துரை. வவுனியா: அருணா வெளியீட்டகம், 68, வைரவர் கோவில் வீதி, வைரவர் புளியங்குளம், 1வது பதிப்பு, 2020. (வவுனியா: கலைமகள் அச்சகம்).
vii, 96 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-1347-25-3.
இன்று வன்னிப் பெருநிலப்பரப்பு எனப் பெருமையுடன் பேசப்படும், அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தில் வன்னியனாராக கடமையாற்றிய பண்டாரம் என்பவரது வரலாறு முக்கியமானதாகும். எதிர்கால சமூகத்தின் நன்மை கருதி அவருடைய வரலாற்றை சுருக்கமாக எழுதவேண்டும் என பண்டாரம் வன்னியனார் ஆர்வலர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த வரலாற்றுச் சுருக்கத்தை நூலாக ஆசிரியர் வழங்கியுள்ளார். இந்நூலில் வரலாற்றில் குறிக்கப்படும் பெயர்களின் விளக்கங்கள், அறிமுகம், அந்நியர் ஆட்சி, பண்டாரம்-வன்னியனார், உசாத்துணைகளும் ஆசிரியரின் ஏனைய நூல்களும் என ஐந்து அத்தியாயங்களாக வகுத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.