கி.சு.கிருஷ்ணசாமி. சென்னை 600 010: சுருளி பதிப்பகம், 777, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 1983. (சென்னை14: மூவேந்தர் அச்சகம்).
32 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 19×12 சமீ.
1983 ஜீலையில் இலங்கையில் நடந்தேறிய தமிழ் இனவழிப்பின் இலக்கிய சாட்சியாக இக்கவிதைகள் அமைகின்றன. ஈழத்தமிழர்களின் துயர்கேட்டு இக்கவிஞர் தாய்த் தமிழகத்திலிருந்து வடித்த கண்ணீர்க் கவிதைகள் இவை. மாநில, மத்திய அரசுகளும் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து ஆற்றவேண்டிய பணிகளுக்குச் சில யோசனைகளாகவும் சில கவிதைகள் அமைந்துள்ளன. இந்நூலாசிரியரின் முதலாவது நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0563).