17106 நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

வள்ளுவதாசன். மாங்குளம்: புலவர் வள்ளுவதாசன், 1வது பதிப்பு, 2019. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).

91 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.

திருக்குறள், நாலடியார் ஒப்பீடும் விளக்கமும். அறம் சார்ந்த திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களிலுமுள்ள வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய மிக முக்கியமான பாக்களைத் தொகுத்து, மீண்டும் எமது வாழ்க்கை நெறிமுறைகளை வளரும் சந்ததியினருக்கு ஞாபகம் ஊட்டும் வகையில் இந்நூலை புலவர் வள்ளுவதாசன் உருவாக்கியுள்ளார். கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கான பாடத்திட்டத்திற்கு அமைவான ‘பேதமை’, மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைக்கான அறிவுடைமை, குற்றங் கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலி அறிதல், காலம் அறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் ஆகிய பாடங்களையும், பாடத்திட்டம் சாராத பிரிவுகளான கல்வி, வெகுளாமை, கயமை, இரவச்சம், நல்குரவு, கூடாநட்பு, சுற்றம் தழால், கேள்வி, ஒப்புரவறிதல், ஈகை, நட்பாராய்தல், வினைத்திட்பம், நாடு, படைச்செருக்கு, வாய்மை, உட்பகை, பெரியாரைப் பிழையாமை, கல்லாமை ஆகிய பிரிவுகளையும் இந்நூல் உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

17955 யாழ்ப்பாண அசம்பாவிதங்கள் -1981.

அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: நூலாசிரியர், 1வது பதிப்பு, ஜுலை 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், 536, ஆஸ்பத்திரி வீதி). 24 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14.5 சமீ. 1981இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற

13466 புதிய க.பொ.த.(உயர்தர) மாணவர் இரசாயனம்: முதலாம் பாகம்.

பொன். செல்வரத்தினம். யாழ்ப்பாணம்: ஆ.துரைராஜசிங்கம், 141, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, வைகாசி 1981. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம்). (4), 99 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 12.00, அளவு: 21×14 சமீ.