17128 அத்தியடிப் பதியுறையும் நர்த்தன விநாயகர்.

இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: இராசையா ஸ்ரீதரன், நாச்சிமார் கோவிலடி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி).

viii, (8), 82 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 23.5×18 சமீ.

கணபதிக் கடவுளின் பெருையைப் பறைசாற்றி நிற்கின்ற கருத்தாழம் மிக்க விடயங்களைத் தன்னகத்தே கொண்டு அழகிய மூவர்ண அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கும் ஒர் ஆன்மீகப் பதிவேடு. விநாயகப் பெருமானின் அழகுத் திருத்தோற்றமும் அதன் பெருமையும் நல்ல உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அத்தியடி நர்த்தன விநாயகர் ஆலய வரலாற்றை முதலாவது கட்டுரையிலும், விநாயகப் பெருமானின் திருவருள் திறத்தைப் பற்றியும், அவரை வணங்கி வழிபடும் முறைமை பற்றியும் தொடர்ந்து வரும் கட்டுரைகளிலும் ஆராய்ந்து எளிய தமிழ் நடையில் விளக்கியிருக்கிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 110043).

ஏனைய பதிவுகள்