என்.சண்முகரத்தினம். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, மார்ச் 2023. (சென்னை 600 077: மணி ஆப்செட்).
182 பக்கம், விலை: இந்திய ரூபா 260., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6337-02-5.
இந்த நூல் 1976-2021 காலகட்டத்தில் எழுதப்பெற்ற 12 கட்டுரைகளை உள்ளடக்குகின்றது. நடிகர் ஒன்றியம் அளித்த வித்தியாசம் கலந்த விருந்து (1976), தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’ நாவல் பற்றிய ஒரு விமர்சனம் (1985), துருவச் சுவடுகள்: புலம்பெயர்ந்தோர் இலக்கிய அலை (1989), ஈழத் தமிழர் போராட்டத்தில் புலம்பெயர் எழுத்தாளரின் பங்கு (1989), அகதி: ஆத்திரமும் கவித்துவமான துன்பியலும் (1991), புலம்பெயர் தமிழிலக்கியத்தின் எதிர்காலம் பற்றிச் சில கேள்விகள் (2001), இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி. இராஜதுரையின் இந்து-இந்தி-இந்தியா (1995), மாற்றமும் மரபு பேணலும் (2018), அழகும் அர்த்தங்களும் ததும்பிட அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் (2018), காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம்: சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ (2019) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71430).