17232 வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் பொருளாதாரமும் அவை எதிர்நோக்கும் சவால்களும்.

கே.ரி.கணேசலிங்கம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

37 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் நினைவுப் பேருரையாக 28.02.2015 அன்று இவ்வுரை ஆற்றப்பட்டது. கே.ரி.கணேசலிங்கம் முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை கலைமகள் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வித்தியானந்தா கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் முனைவர் பட்ட ஆய்வை புதுச்சேரிப் பல்கலைக்கழகத்திலும் நிறைவுசெய்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரச அறிவியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றியவர். ‘தென்னாசியாவில் அரசியல் கலாசாரம்’, ‘புதிய உலக ஒழுங்கு’, ‘பலஸ்தீனம்’, ‘சமகால அரசியல் கலாசாரச் செல்நெறிகள்’, ‘இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள்’ முதலான நூல்களின் ஆசிரியர் இவர்.

ஏனைய பதிவுகள்